Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ செங்கையில் மாயமான குழந்தைகள் தாயுடன் மீட்பு; இருவருக்கு 'காப்பு'

செங்கையில் மாயமான குழந்தைகள் தாயுடன் மீட்பு; இருவருக்கு 'காப்பு'

செங்கையில் மாயமான குழந்தைகள் தாயுடன் மீட்பு; இருவருக்கு 'காப்பு'

செங்கையில் மாயமான குழந்தைகள் தாயுடன் மீட்பு; இருவருக்கு 'காப்பு'

ADDED : ஜூலை 10, 2024 01:19 AM


Google News
Latest Tamil News
நெமிலி:செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வேலன், 31. ஆட்டோ ஓட்டுனர். இவருக்கு, ஆர்த்தி, 30, என்பவருடன் திருமணமாகி, 11 வயதில் ஒரு மகள், 7 வயதில் ஒரு மகன் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக, வேலனும், ஆர்த்தியும் ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தந்தையின் பராமரிப்பில் இரு குழந்தைகளும், ஒழலுார் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற குழந்தைகளை மதிய உணவு இடைவெளியின் போது, மர்ம நபர்கள் கடத்தி சென்றதாக வேலன் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் குழந்தைகளை செங்கல்பட்டு தாலுகா போலீசார், நான்கு தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி போலீசாரின் உதவியுடன், நெமிலி புன்னை கிராமத்தில் குழந்தைகளை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து நெமிலி போலீசார் கூறியதாவது:

ஆர்த்திக்கும், வெம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கோகுல்ராஜ், 35, தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர் என்பவருக்கும் இடையே, ஆறு மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு, பன்னீயூர் கூட்டுச்சாலையில் வசித்து வந்தனர்.

நெமிலி-புன்னை பகுதியில், இரு தினங்களுக்கு முன் தனி வீடு எடுத்துள்ளனர். குழந்தைகள் தன்னுடன் இருக்க வேண்டும் என, பள்ளிக்கு சென்று, குழந்தைகளை ஆர்த்தி அழைத்து வந்துள்ளார்; அவர்களை மீட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரக்கோணம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஒப்படைத்த பின், நான்கு பேரையும் செங்கல்பட்டுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில், இரு குழந்தைகளையும் வேலன் மற்றும் ஆர்த்தி இருவரும் உரிமை கொண்டாடுவதால், குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திடன் போலீசார் ஒப்படைத்தனர். இரு குழந்தைகளும் தந்தையுடன் செல்ல சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, குழந்தைகளை கடத்தி செல்ல உதவிய ஆர்த்தியின் நண்பர்களான கோகுல், 33, மற்றும் சரவணன், 34, ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us