ADDED : ஜூன் 12, 2024 02:12 AM
அரக்கோணம்:அரக்கோணம் ஒன்றியம் அம்மனுார் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 55. இவர் அதே பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது பசுமாடு அங்குள்ள விவசாய நிலத்தில் நேற்று மேய்ச்சலுக்கு சென்றது. அப்போது மழை காரணமாக விவசாய நிலத்தில் மின்கம்பி அறுந்து கீழே விழுந்தது. அதை மிதித்த பசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.