Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ அங்கன்வாடி ஊழியர் பலி

அங்கன்வாடி ஊழியர் பலி

அங்கன்வாடி ஊழியர் பலி

அங்கன்வாடி ஊழியர் பலி

ADDED : ஜூலை 07, 2024 02:39 AM


Google News
வாலாஜா:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த ஈச்சந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி, 35; அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.

நேற்று மதியம் வழக்கம் போல், அங்கன்வாடி மைய வளாகத்தில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த், 28, ஓட்டி சென்ற மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து, அங்கன்வாடி மையத்தின் சுவர் மீது மோதியது.

இதில், சுவர் இடிந்து லட்சுமி மீது விழுந்ததில், படுகாயமடைந்த அவரை மீட்டு, வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், லட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us