/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தணியுமா எங்கள் தண்ணீர் தாகம் இன்று உலக தண்ணீர் தினம் தணியுமா எங்கள் தண்ணீர் தாகம் இன்று உலக தண்ணீர் தினம்
தணியுமா எங்கள் தண்ணீர் தாகம் இன்று உலக தண்ணீர் தினம்
தணியுமா எங்கள் தண்ணீர் தாகம் இன்று உலக தண்ணீர் தினம்
தணியுமா எங்கள் தண்ணீர் தாகம் இன்று உலக தண்ணீர் தினம்
நீர் மாசுபாடு
மனித செயல்பாடுகளால் நரீல் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றங்கள் நீரை மாசடைய செய்கிறது. இது நீர் நிலைகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும் பயன்பாட்டிற்கு உரிய தன்மையை இழந்து விடுவதோடு அந்நீரில் வாழும் உயிரினங்களும் இறந்து விடுவதால் உயிரிய பன்மையத் தன்மையும் நீர்ச்சூழல் மண்டலமும் பாதிப்படைகிறது.
மினரல் வாட்டர்
தண்ணீர் என்றவுடன் ஆர்.ஓ.,(எதிர் சவ்வூடு பரவல்) தொழில் நுட்பம் மூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு கேனில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் தான் தரம் வாய்ந்த தண்ணீர் என்றாகிவிட்டது. முன்பெல்லாம் ஆறு, ஏரி,குளங்களில் உள்ள மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு ஊருக்கு ஒரு சுவையில் தண்ணீர் இருக்கும். இப்போதெல்லாம் கேனில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் ஒரே சுவை கொண்டதாகிவிட்டது.
தண்ணீர் பஞ்சம்
இந்திய வானிலை ஆய்வு மையம்அண்மையில் வெளியிட்ட தரவுகளின் படி 2024ல் தென்மேற்கு பருவமழை பருவ காலங்களுக்கு ஏற்ற வகையில் அமையாமல் போனது எனவும், கடந்த ஆண்டு அதிக மழைப்பொழிவை பெற்றிருந்தாலும் தேக்கி வைக்க முடியாமல் கடலில் வீணாகிவிட்டது.
தண்ணீர் தட்டுப்பாடும் தீர்வும்
வான்நின்று உலகம் வழங்கி ↔வருதலால்
ஏரி குளங்களின் முக்கியத்துவம்
மழை நீர் சேகரிப்பில் ஏரி, குளங்களின் பங்களிப்பு அளப்பரியது. நிலத்தடி நீர் மட்டம் உயரவும், நன்னீர் உயிரிய பன்மையத் தன்மையை பாதுகாப்பதிலும் ஏரி, குளங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
பசுமை இல்ல விளைவு
பெருகி வரும் மக்கள் தொகை, தொழிற்சாலைகள் பெருக்கம், நகரமயமாக்கல் போன்றவைகளால் உலகளாவிய பிரச்னையாக புவி வெப்பமடைதல் இருந்து வருகிறது. பசுமை இல்ல வாயுக்களான கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்றவைகளால் புவி வெப்பமயமாதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது.