Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வீடுதேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் வண்டி வாடகையை வழங்க வலியுறுத்தல்

வீடுதேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் வண்டி வாடகையை வழங்க வலியுறுத்தல்

வீடுதேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் வண்டி வாடகையை வழங்க வலியுறுத்தல்

வீடுதேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் வண்டி வாடகையை வழங்க வலியுறுத்தல்

ADDED : செப் 05, 2025 12:47 AM


Google News
ராமநாதபுரம்:வீடுதேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் திட்டத்தில் ஒரு கார்டுக்கு ரூ.40 தருகின்றனர். இத்தொகை போதுமானதாக இல்லை.

வண்டி வாடகை, எடையாளர் கூலிக்கு கூடுதல் செலவாகிறது. எனவே சம்பந்தப்பட்ட கடையின் கூட்டுறவு சங்கமே வண்டி வாடகை வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என விற்பனையாளர்கள் வலியுறுத்தினர்.

தமிழகத்தில் தாயுமானவர் திட்டம் மூலம் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டம் துவங்கி உள்ளது. இதில் ஒரு ரேஷன் கார்டுக்கு ஊரகப் பகுதிக்கு ரூ. 40, நகர் பகுதிக்கு ரூ. 36, மலைப்பகுதிகளுக்கு ரூ. 100 ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

ஒவ்வொரு கடைகளிலும் 20 முதல் 30 பேர் வரை உள்ளனர். மாதத்தின் 2வது சனி, ஞாயிறு அன்று வீடுகளுக்கு சென்று பொருட்களை வழங்குகின்றனர். கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு செல்லும் போது வண்டி வாடகையாக ரூ.2000 முதல் 3000 வரை செலவாகிறது. இதுபோக எடையாளர் கூலி என விற்பனையாளர்கள் தங்களது சொந்த பணத்தை செலவழிக்கும்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூறுகையில் 'வீடுதேடி ரேஷன் பொருட்கள் வழங்க கடையை அடைத்துவிட்டு செல்கிறோம். இதனால் அப்போது கடைக்கு பொருட்கள் வாங்க வருவோர் ஏமாற்றம் அடைகின்றனர். பயனாளிகளின் வீடுகள் ஒரே இடத்தில் இருப்பது இல்லை. இதன் காரணமாக வண்டி வாடகை செலவு அதிகமாகிறது.

எனவே அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் வண்டி ஏற்பாடு செய்து, அவர்களே வாடகையை செலுத்த வேண்டும். அதற்கு உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் 'என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us