Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ விடுதலையான மீனவர் ராமேஸ்வரம் திரும்பினார்

விடுதலையான மீனவர் ராமேஸ்வரம் திரும்பினார்

விடுதலையான மீனவர் ராமேஸ்வரம் திரும்பினார்

விடுதலையான மீனவர் ராமேஸ்வரம் திரும்பினார்

ADDED : செப் 05, 2025 12:55 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ராமேஸ்வரம் மீனவர் வீடு திரும்பினார்.

ராமேஸ்வரத்தில் இருந்து ஆக., 9ல் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 7 பேரை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆக.,26ல் வழக்கை விசாரித்த மன்னார் நீதிமன்றம், 6 மீனவர்களுக்கு தலா ரூ. 3 லட்சம் ( இந்திய மதிப்பு ரூ.87 ஆயிரம்) அபராதமும், கட்டத் தவறினால் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டது.

மற்றொரு மீனவர் ஆரோக்கிய சான்ட்ரின் 19, இதய நோயாளி என்பதால் அவருக்கு ரூ.50 ஆயிரம் (இந்திய மதிப்பு ரூ. 14,500) அபராதம் விதித்தது. இந்த அபராதத்தை குடும்பத்தினர் அங்குள்ள அதிகாரிகள் மூலம் நீதிமன்றத்தில் செலுத்தியதால் ஆரோக்கிய சான்ட்ரின் விடுவிக்கப்பட்டார். மற்ற 6 மீனவர்களும் அபராதம் செலுத்தாததால் சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த ஆரோக்கிய சான்ட்ரின், அங்கிருந்து நேற்று முன்தினம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us