/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ திருவெற்றியூர் கோயில் உண்டியல் திறப்பு திருவெற்றியூர் கோயில் உண்டியல் திறப்பு
திருவெற்றியூர் கோயில் உண்டியல் திறப்பு
திருவெற்றியூர் கோயில் உண்டியல் திறப்பு
திருவெற்றியூர் கோயில் உண்டியல் திறப்பு
ADDED : மே 28, 2025 11:31 PM
திருவாடானை: திருவாடானை அருகே சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நேற்று 5 பிரார்த்தனை உண்டியல்கள் திறக்கப்பட்டது. அதில் ரொக்கம் ரூ.15 லட்சத்து 40 ஆயிரத்து 954, தங்கம் 93 கிராம், வெள்ளி 410 கிராம் இருந்தது.
அதனை தொடர்ந்து 435 பசலிக்கான வெள்ளி கண்மலர் விற்பனை உரிமம் ரூ.10 லட்சத்து 17 ஆயிரத்திற்கும், பிரசாதம் விற்பனை உரிமம் ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, தேவஸ்தான கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆய்வாளர் சண்முகசுந்தரம், சிரஸ்தார் சுப்பிரமணியன், கவுரவ கண்கானிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் திருவெற்றியூர் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.