ADDED : ஜூன் 04, 2025 12:53 AM

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சுவாமி வீதி உலா நடந்தது.
மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் முருகன், பூத வாகனத்தில் பிரியாவிடையுடன் ஆதிரெத்தினேஸ்வரர், காமதேனு வாகனத்தில் சிநேகவல்லி அம்மன், கேடக வாகனத்தில் சண்டிகேஸ்வரர் வீதி உலா நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.