ADDED : செப் 15, 2025 06:58 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் வெங்கலக்குறிச்சியை சேர்ந்த ராமசுப்பிரமணியன் மகன் ஹரிகார்த்திகேயன் 17, முதுகுளத்தூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். வெங்கலக்குறிச்சி கிராமத்தில் முருகன் கோயில் அருகே புதிதாக வீடு கட்டி வருகின்றனர்.
வீட்டிற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக மின்மோட்டார் பயன்படுத்தினர். அப்போது சுவிட்சை அணைக்காமல் மின் மோட்டாரை ஹரிகார்த்திகேயன் தொட்ட போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.