Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அக்னி கடலில் மூழ்கி சிவகங்கை பக்தர் பலி

அக்னி கடலில் மூழ்கி சிவகங்கை பக்தர் பலி

அக்னி கடலில் மூழ்கி சிவகங்கை பக்தர் பலி

அக்னி கடலில் மூழ்கி சிவகங்கை பக்தர் பலி

ADDED : ஜூன் 13, 2025 01:43 AM


Google News
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் மூழ்கிய சிவகங்கையை சேர்ந்த பக்தர் வேலு 62, உயிரிழந்தார்.

சிவகங்கை காஞ்சிரங்கால் பகுதியை சேர்ந்தவர் வேலு 62. இவர் குடும்பத்தினருடன் நேற்று காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார். இவர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடிய போது காற்றின் வேகத்தில் எழுந்த அலையில் சிக்கி திணறிய முதியவர் வேலு கடலுக்குள் மூழ்கினார். உறவினர்கள் முதியவரை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முதியவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மண்டபம் மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us