ADDED : ஜூன் 27, 2025 11:32 PM

திருவாடானை: திருவாடானை தாலுகா அலுவலகம் அருகே வட்டார கல்வி அலுவலக நுழைவு வாசலில் முட்புதர் மண்டியது.
பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் வாழ்விடமாக இருந்தது. பூச்சிகள் அலுவலகத்திற்குள் நுழைந்ததால் அலுவலர்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக இயந்திரம் மூலம் செடிகள் அகற்றப்பட்டு அலுவலகம் வாசல் சுத்தமாக்கப்பட்டது.