ADDED : ஜூன் 17, 2025 06:30 AM
தொண்டி; தொண்டி வெள்ளை மணல் தெருவை சேர்ந்தவர் ராமு 43. பெயின்டராக வேலை பார்த்தார். திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மனநிலை பாதிக்கபட்டிருந்த ராமு நேற்று முன்தினம் வீட்டில் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ராமு இறந்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.