/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமேஸ்வரத்தில் படியளந்த சுவாமி, அம்மன்ராமேஸ்வரத்தில் படியளந்த சுவாமி, அம்மன்
ராமேஸ்வரத்தில் படியளந்த சுவாமி, அம்மன்
ராமேஸ்வரத்தில் படியளந்த சுவாமி, அம்மன்
ராமேஸ்வரத்தில் படியளந்த சுவாமி, அம்மன்
ADDED : ஜன 05, 2024 12:43 AM

ராமேஸ்வரம்:-அஷ்டமி பூப்பிரதட்சணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு படியளந்தனர்.
இதையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் காலை 7:00 மணிக்கு சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பஞ்சமூர்த்திகளுடன் திட்டகுடி, வர்த்தகன் தெரு, சீதா தீர்த்தம் வரை சாலையில் உலா வந்து பக்தர்களுக்குபடியளந்து அருளாசி வழங்கினர். ஏராளமானோர் தரிசித்தனர்.
மதியம் 12:00 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்பினர். இதனால் காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி வரை கோயில் நடை மூடப்பட்டு இருந்தது.