/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ எமனேஸ்வரத்தில் புதைந்து போன வாறுகால் பல லட்சம் நிதி வீணடிப்பு எமனேஸ்வரத்தில் புதைந்து போன வாறுகால் பல லட்சம் நிதி வீணடிப்பு
எமனேஸ்வரத்தில் புதைந்து போன வாறுகால் பல லட்சம் நிதி வீணடிப்பு
எமனேஸ்வரத்தில் புதைந்து போன வாறுகால் பல லட்சம் நிதி வீணடிப்பு
எமனேஸ்வரத்தில் புதைந்து போன வாறுகால் பல லட்சம் நிதி வீணடிப்பு
ADDED : ஜூன் 30, 2025 06:08 AM

பரமக்குடி : பரமக்குடி, இளையான்குடி ரோடு எமனேஸ்வரம் விலக்கு ரோட்டில் இருந்து மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இதன்படி வாறுகால் கட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளை கடந்துள்ளது.
விலக்கு ரோட்டில் இருந்து எமனேஸ்வரமுடையவர் சிவன் கோயில் பகுதி வரை கழிவுகள் தேங்கி ஆபத்தாக இருக்கிறது. வைகை ஆறு தரைப்பாலம் வரை முற்றிலும் வடிகால் கண்ணில் தெரியாமல் மண்ணில் புதைந்துள்ளது.
இதேபோல் எமனேஸ்வரம் நேருஜி மைதானம் தொடங்கி சில மீட்டர் துாரம் வரை வடிகால் அமைக்கப்பட்டது. கான்கிரீட் கலவையில் அமைக்கப்பட்ட வாறுகால் தற்போது தடம் தெரியாமல் உள்ளது. துறை அதிகாரிகள் காணாமல் போன பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாறுகாளை மீட்டெடுக்க வேண்டும்.
மேலும் விடுபட்ட இடங்களிலும் வாறுகாலை தொடர்ச்சியாக அமைத்து முறைப்படுத்தி தண்ணீர் வழிந்தோட நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.