/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/காவிரி குடிநீர் வராததால் கீழச்சாக்குளம் மக்கள் சிரமம்காவிரி குடிநீர் வராததால் கீழச்சாக்குளம் மக்கள் சிரமம்
காவிரி குடிநீர் வராததால் கீழச்சாக்குளம் மக்கள் சிரமம்
காவிரி குடிநீர் வராததால் கீழச்சாக்குளம் மக்கள் சிரமம்
காவிரி குடிநீர் வராததால் கீழச்சாக்குளம் மக்கள் சிரமம்
ADDED : ஜன 30, 2024 11:31 PM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் இரண்டு மாதத்திற்கும் மேலாக காவிரி குடிநீர் வராததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
கீழச்சாக்குளம் கிராமத்தில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
கிராமத்தில் தரை தளம் தொட்டி அமைக்கப்பட்டு காவிரி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இரண்டு மாதத்திற்கும் மேலாக முறையாக காவிரி குடிநீர் வரவில்லை. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
வேறுவழியின்றி முதுகுளத்துார்--சாயல்குடி சாலையில் கீழச்சாக்குளம் முக்கு ரோட்டில் காவிரி குடிநீர் செல்லும் மெயின் குழாயில் அவ்வப்போது வரும் குடிநீரை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
சில நேரங்களில் டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலை உள்ளது.
இதனால் அத்தியாவசிய வேலைக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே கிராமத்திற்கு காவிரி குடிநீர் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.