Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பாம்பன் பாலத்தில் இரும்பு பிளேட் உடைந்தது: விபத்து அபாயம்

 பாம்பன் பாலத்தில் இரும்பு பிளேட் உடைந்தது: விபத்து அபாயம்

 பாம்பன் பாலத்தில் இரும்பு பிளேட் உடைந்தது: விபத்து அபாயம்

 பாம்பன் பாலத்தில் இரும்பு பிளேட் உடைந்தது: விபத்து அபாயம்

ADDED : டிச 01, 2025 07:06 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் இரும்பு பிளேட் உடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளதால், வாகனங்களில் செல்பவர்களுக்கு விபத்து அபாயம் உள்ளது.

பாம்பன் கடலில் அமைத்த தேசிய நெடுஞ்சாலை பாலம் 1988 அக்., 2ல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

இப்பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனம், அரசு பஸ்களில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக பாலம் பலவீனம் அடைந்து சேதமடைந்த தடுப்பு சுவர், மின்கம்பம், விரிசலடைந்த துாண்களை மராமத்து செய்து புதுப்பித்தனர்.

ஆனால் பாலத்தில் பல இடங்களில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக கிடந்த நிலையில், பாலம் நடுவில் உள்ள பிங்கர் ஜாயிண்ட் எனும் இரும்பு பிளேட் லேசாக சேதமடைந்து இருந்தது.

இதனை தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் சரிசெய்யாததால், இரு நாட்களாக பெய்த கனமழையில் இரும்பு பிளேட் மேலும் சேதமடைந்து, இரும்பு போல்டுகள் வெளியில் நீண்டபடியும், அந்த இடத்தில் ஒரு அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

இதன் மீது வாகனங்கள் செல்லும்போது டயர்கள் சேதமடைந்து, அதிர்வுடன் தடதட என சத்தம் எழுவதால், பாலத்தில் விபத்து அச்சத்தில் மக்கள் பயணிக்கின்றனர்.

இரவில் செல்லும் வாகனங்கள் சேதமடைந்த பிளேட்டில் சிக்கி விபத்து நடக்க வாய்ப்புள்ளது. ஆகையால் சேதமடைந்த இரும்பு பிளேட்டை சரி செய்ய அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us