Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தேசிய அளவிலான கடிதம் எழுதும்  போட்டியில் பங்கேற்க அழைப்பு

தேசிய அளவிலான கடிதம் எழுதும்  போட்டியில் பங்கேற்க அழைப்பு

தேசிய அளவிலான கடிதம் எழுதும்  போட்டியில் பங்கேற்க அழைப்பு

தேசிய அளவிலான கடிதம் எழுதும்  போட்டியில் பங்கேற்க அழைப்பு

ADDED : செப் 17, 2025 12:40 AM


Google News
ராமநாதபுரம் : இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்.,8 ல் துவங்கி டிச., 8 வரை நடக்கிறது. இதில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம்.

2025-2026 ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி 'எனது முன்மாதிரிக்கு கடிதம் (Letter to My Role Model) என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி இவற்றில் ஏதாவது ஒரு மொழியில் எழுதி முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை - 600 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உள்நாட்டு கடித பிரிவில் (Inland letter card) 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், கடித உறை பிரிவில் (Envelope) 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் கைப்பட எழுத வேண்டும்.

2025 ஜன.,1ல் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், அடையாதவர்கள் என்ற வயது சான்று கடிதத்தில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.

போட்டியில் பங்குபெறுவோரின் பெயர் மற்றும் இருப்பிட முகவரியை கடிதத்தில் தவறாமல் குறிப்பிட வேண்டும்.

இப்போட்டியில் மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம், 2ம் இடம் ரூ.10ஆயிரம், மூன்றாமிடம் ரூ.5000 வழங்கப்படும்.

தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50ஆயிரம், 2ம் இடம் ரூ.25 ஆயிரம், மூன்றாமிடம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இப்போட்டியில் பங்கு பெறலாம் என ராமநாதபுரம் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us