ADDED : ஜன 09, 2024 12:34 AM
பரமக்குடி, : பரமக்குடி ரயில்வே அஞ்சல் பிரிப்பகம் முன்பு இந்திய கம்யூ., சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நகர் செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கைத்தறி சம்மேளன மாநில பொதுச் செயலாளர் ராதா, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பெடரேஷன் உறுப்பினர்கள் கோவிந்தன், ருக்மாங்கதன், கணேசமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்க வலியுறுத்தினர்.


