Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரத்தில் பெருகி வரும் தெரு நாய்கள்: விபத்து அபாயம்

ராமநாதபுரத்தில் பெருகி வரும் தெரு நாய்கள்: விபத்து அபாயம்

ராமநாதபுரத்தில் பெருகி வரும் தெரு நாய்கள்: விபத்து அபாயம்

ராமநாதபுரத்தில் பெருகி வரும் தெரு நாய்கள்: விபத்து அபாயம்

ADDED : செப் 11, 2025 10:49 PM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்; ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களால் சிறியவர், பெண்கள், முதியவர்கள் வீதியில் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. நடுரோட்டில் குறுக்கே வருவதால் சிறிய அளவிலான விபத்துகளும் நடக்கிறது.

ராமநாதபுரத்தில் நாளுக்கு நாள் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தெரு நாய்கள் உணவிற்காக குடியிருப்பு பகுதிகளில் கூட்டமாக திரிகின்றன. சில வெறிபிடித்த நாய்கள் மக்களை தாக்குகின்றன.

கோழி, ஆடுகளை கடிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. நாய்கள் தொல்லையால் சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் வீட்டை விட்டு வர அச்சப்படுகின்றனர்.

மேலும் அரசு மருத்துவமனை ரோடு, மதுரை ரோடு, ராமேஸ்வரம் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, பட்டணம்காத்தான் டி-பிளாக் ரோடு உள்ளிட்ட இடங்களில் உலா வரும் நாய்களால் இரவு நேரங்களில் சிறிய அளவில் விபத்துகளும் நடக்கிறது. இதில் சில சமயங்களில் நாய்கள் காயமடைந்து உயிரிழக்க நேரிடுகிறது.

எனவே தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தடுப்பூசி இடவேண்டும். வெறிபிடித்த, நோய்பட்ட நாய்களை பிடித்து அவற்றிற்கு சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us