/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கோரிக்கை நிறைவேறாவிடில் கடையடைப்பு போராட்டம் வர்த்தகர் சங்கம் அறிவிப்புகோரிக்கை நிறைவேறாவிடில் கடையடைப்பு போராட்டம் வர்த்தகர் சங்கம் அறிவிப்பு
கோரிக்கை நிறைவேறாவிடில் கடையடைப்பு போராட்டம் வர்த்தகர் சங்கம் அறிவிப்பு
கோரிக்கை நிறைவேறாவிடில் கடையடைப்பு போராட்டம் வர்த்தகர் சங்கம் அறிவிப்பு
கோரிக்கை நிறைவேறாவிடில் கடையடைப்பு போராட்டம் வர்த்தகர் சங்கம் அறிவிப்பு
ADDED : ஜன 29, 2024 05:27 AM

கடலாடி: கடலாடியில் அனைத்து வசதிகளுடன் நவீன பஸ்ஸ்டாண்ட அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது.
கடலாடி வர்த்தகர் சங்கம் சார்பில் ஆக., 2023ல் நவீன கட்டமைப்புகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பது சம்பந்தமாக தமிழக அரசிற்கும் சம்பந்தப்பட்ட அனைத்து அரசு அலுவலர்களுக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது.
ஐந்து மாதங்களாக எந்த நடவடிக்கையும் இல்லாததாலும், கடலாடியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அதன் செயல்பாட்டை நிறுத்தி உள்ளது. எனவே பி.எஸ்.என்.எல்., அலுவலகம் கடலாடியில் தொடர்ந்து இயங்க வலியுறுத்தியும் பிப்.15க்குள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறோம்.
எங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால் தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என கடலாடி வர்த்தக சங்க தலைவர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
கடலாடி அரசு தாலுகா மருத்துவமனையில் டாக்டர் மற்றும் மருந்தாளுநர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
கடலாடி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை கிடைக்காததால் 60 கி.மீ.,ல் உள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது.
கர்ப்பிணிகளுக்கான பரிசோதனை, பிரசவத்திற்குரிய டாக்டர்கள் இல்லாததால் பிரசவ வார்டு செயல்படாமல் உள்ளது. 9 நர்சுகள் இருக்க வேண்டிய நிலையில் குறைவான நர்சுகள் உள்ளனர்.
இவர்களுக்கும் மாற்றுப் பணி வழங்கி வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பதால் நர்சுகள் பற்றாக்குறை நிலவுகிறது.
எனவே குறைகளை தீர்க்க விட்டால் தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.