ADDED : ஜூன் 13, 2025 11:39 PM
ராமேஸ்வரம்:குஜராத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தோரின் ஆன்மா சாந்தியடைய வேண்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் நேற்று ராமேஸ்வரம் மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் மக்கள் பாதுகாப்பு பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்வேல், பிரபாகரன், நிர்வாகிகள் சுடலை, முத்துராமன், வெள்ளைச்சாமி, ஜெரோம்குமார், அக்னி தீர்த்தம் புரோகிதர்கள் சங்க செயலாளர் ரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.