ADDED : செப் 01, 2025 05:50 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் இருந்து ஆக., 30ல் 360 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் வழக்கம் போல் இந்திய-- இலங்கை எல்லையில் இருந்தபோது அங்கு இரு கப்பலில் ரோந்து சுற்றிய இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீன்பிடிக்க விடாமல் விரட்டினர்.
இதனால் அச்சமடைந்தவர்கள் அப்பகுதியில் மீன்பிடிக்காமல், இந்திய பகுதிக்குள் திரும்பி வந்து மீன்பிடித்தனர்.
இதில் பெரும்பாலானவர்களின் படகில் எதிர்பார்த்த மீன்வரத்து இன்றி தொழில் நஷ்டத்துடன் நேற்று காலை ராமேஸ்வரம் கரை திரும்பினர். இப்பிரச்னை தொடர்வதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.