ADDED : மார் 23, 2025 04:04 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் மின்னணு குறித்த கருத்தரங்கு நடந்தது. முதல்வர் பெரியசாமி தலைமை வகித்தார்.
மின்னியல், மின்னணுவியல் துறை தலைவர் மகேந்திரன் வரவேற்றார். எல்.அன்.டி., துறையில் தொழில்நுட்ப பொறியாளராக பணிபுரியும் செந்தில்குமார் மின்னணு பயன்பாடு குறித்து பேசினார். பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.பேராசிரியர் கார்த்திகா நன்றி கூறினார்.