/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கடலாடியில் தொடர்பு எல்லைக்கு அப்பால் மின்வாரிய ஊழியர்கள் பொதுமக்கள் அவதி கடலாடியில் தொடர்பு எல்லைக்கு அப்பால் மின்வாரிய ஊழியர்கள் பொதுமக்கள் அவதி
கடலாடியில் தொடர்பு எல்லைக்கு அப்பால் மின்வாரிய ஊழியர்கள் பொதுமக்கள் அவதி
கடலாடியில் தொடர்பு எல்லைக்கு அப்பால் மின்வாரிய ஊழியர்கள் பொதுமக்கள் அவதி
கடலாடியில் தொடர்பு எல்லைக்கு அப்பால் மின்வாரிய ஊழியர்கள் பொதுமக்கள் அவதி
ADDED : ஜூன் 12, 2025 11:01 PM
கடலாடி; கடலாடி நகரில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்கு ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன.
ஜூன் 6ல் இரவு 11:30 மணிக்கு மின்தடை ஏற்பட்டது.
அதன் பின் மறுநாள் (ஜூன் 7 ல்) காலை 8:30 மணிக்கு மின் விநியோம் வந்தது.
அச்சமயத்தில் பொதுமக்கள் கடலாடி மின்வாரிய அலுவலர்களின் அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் 'சுவிட்ச் ஆப்' எனவும் மற்ற அலைபேசி எண்களை தொடர்பு கொண்டால் தொடர்பு எல்லைக்கு வெளியே என வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
கடலாடியை சேர்ந்த விவசாயிகள் பொன்னுப்பாண்டி, முருகன் ஆகியோர் கூறியதாவது :
கடலாடி துணை மின் நிலையத்தில் பணியாற்றும் மின்வாரிய அலுவலர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை பல மாதங்களாக தொடர்கிறது. மின்வாரிய ஊழியர்களின் மூன்று நபர்களின் அலைபேசிகள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து மின்வாரிய உதவி பொறியாளரிடம் கேட்டதற்கு முறையான பதில் இல்லாதநிலை உள்ளது.
எனவே மாவட்ட மின்வாரிய அலுவலகத்தில் கடலாடி மின்வாரியத்தை தொடர்பு கொள்ளும் வகையில் அரசு வழங்கியுள்ள அலைபேசி எண்ணை பொதுமக்கள் மற்றும் பயனீட்டாளர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் அதன் பயன்பாடு அமைய வேண்டும் என்றனர்.