ADDED : செப் 09, 2025 11:01 PM
கமுதி; கமுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வட்டக்கிளை மாநாடு நடந்தது.
கிளைத்தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கலையரசன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கண்ணதாசன் வரவேற்றார். செயலாளர் கண்ணதாசன் ஆண்டறிக்கை வாசித்தார். கலை இலக்கிய வடிவத்தில் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு கலை இலக்கிய சிந்தனையாளர்களை முறைப்படுத்துதல் குறித்து பேசப்பட்டது. நிர்வாகி குமரேசன் நன்றி கூறினார்.