/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ உலக கடல்பாசிகள் தினத்தில் மீனவருடன் கலந்துரையாடல் உலக கடல்பாசிகள் தினத்தில் மீனவருடன் கலந்துரையாடல்
உலக கடல்பாசிகள் தினத்தில் மீனவருடன் கலந்துரையாடல்
உலக கடல்பாசிகள் தினத்தில் மீனவருடன் கலந்துரையாடல்
உலக கடல்பாசிகள் தினத்தில் மீனவருடன் கலந்துரையாடல்
ADDED : ஜூன் 11, 2025 07:17 AM
ராமேஸ்வரம் : உலக கடல்பாசிகள் தினத்தையொட்டி ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் விஞ்ஞானிகள், மீனவர்கள் சந்தித்து கலந்துரையாடல் நடந்தது.
மண்டபத்தில் உள்ள மத்திய மீன் ஆராய்ச்சி நிலையத்தில் உலக கடல்பாசிகள் தின விழா நடந்தது. இதில் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
இதில் மண்டபம் மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி வினோத், மூத்த விஞ்ஞானி ஜான்சன், மத்திய உபரிநீர் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி வீரகுருநாதன், ராமநாதபுரம் மீன்துறை இயக்குனர் கோபிநாத் பங்கேற்றனர்.
விழாவில் ராமநாதபுரம், கன்னியாகுமரியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கடல்பாசி சேகரிக்கும் மீனவர்கள் பங்கேற்றனர்.
இதில், கடல்பாசி வளர்த்தல், சேகரித்து சந்தைப்படுத்துதல் வரை ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் இதற்கான வருவாய் பெருக்குதல் வசதிகளை மேம்படுத்துவது குறித்து மீனவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு விஞ்ஞானிகள், கடல்பாசி வளர்க்க மத்திய அரசின் மானியம், இதனை சந்தைப்படுத்தி வருவாய் ஈட்டுதல் குறித்து விளக்கமாக பேசினர்.