/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தனஞ்ஜயன் கம்பெனியின் புதிய ஷோரூம் திறப்பு விழா தனஞ்ஜயன் கம்பெனியின் புதிய ஷோரூம் திறப்பு விழா
தனஞ்ஜயன் கம்பெனியின் புதிய ஷோரூம் திறப்பு விழா
தனஞ்ஜயன் கம்பெனியின் புதிய ஷோரூம் திறப்பு விழா
தனஞ்ஜயன் கம்பெனியின் புதிய ஷோரூம் திறப்பு விழா
ADDED : செப் 15, 2025 06:07 AM

ராமநாதபுரம், : ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வழிவிடு முருகன் கோயில் எதிரே தனஞ்ஜயன் கம்பெனியின் டாடா நிறுவன குரோமோ புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது.
புதிய ஷோரூமை செய்யது அம்மாள் குழுமத்தின் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா திறந்து வைத்தார். சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சித்தர் ஸ்ரீ மகா ஸ்வாமிநீ பீடம், சுவாமி சித்தர் ராஜன் ஸமிதி நிறுவனர் பாண்டிராஜன் முன்னிலை வகித்தார்.
தனஞ்ஜயன் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் மேலக்கிடாரம் செந்தில் குமார் வரவேற்றார்.
நரிப்பையூர் காரண மறவர் கூட்டமைப்பு தலைவர் சுந்தரகணபதி, பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் கதிரவன், பரக்கத் மஹால் மேலாளர் அன்சார்அலி, தமிழினி எக்ஸ்போர்ட் ரமேஷ் கண்ணன், சந்திரகலா, சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், லயன்ஸ் கிளப் நிர்வாகி புஹாரி உட்பட தொழிலதிபர்கள், முக்கியஸ்தர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.