Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் தரிசனம் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் தரிசனம் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் தரிசனம் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் தரிசனம் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

ADDED : செப் 20, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
திருப்புல்லாணி:புரட்டாசி முதல் சனிக்கிழமையில் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் மாவட்டம் முழுவதும் பெருமாள் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது.

வைணவ திவ்ய தேசங்களில் 44 வதாக ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் திகழ்கிறது. புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஆதி ஜெகநாதப்பெருமாள், பத்மாஸனி தாயார், தெர்ப்பசயன ராமர் உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் வசதிக்காக நிழற்பந்தல் அமைக்கப்பட்டும், தேவையான இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டும் இருந்தது. உற்ஸவர் கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு விசேஷத் திருமஞ்சனம் சாற்றுமுறை, கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது.பக்தர்களுக்கு பொங்கல், புளியோதரை பிரசாதமாக வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். திருப்புல்லாணி நான்கு ரத வீதிகளிலும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த கார்கள், டூவீலர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

* தொண்டியில் உந்திபூத்த பெருமாள், பாண்டுகுடியில் லட்சுமிநாராயண பெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வரதராஜ பெருமாள் மற்றும் குளத்துார் உள்ளிட்ட பல கிராமங்களில் பெருமாள் கோயில்களில் புரட்டாசி முதல் சனியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us