Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இந்திய பக்தர்களின் அன்னபூரணி உ.பி., ராணி அகில்யாபாய் கோல்கர்

இந்திய பக்தர்களின் அன்னபூரணி உ.பி., ராணி அகில்யாபாய் கோல்கர்

இந்திய பக்தர்களின் அன்னபூரணி உ.பி., ராணி அகில்யாபாய் கோல்கர்

இந்திய பக்தர்களின் அன்னபூரணி உ.பி., ராணி அகில்யாபாய் கோல்கர்

ADDED : ஜூன் 08, 2025 04:55 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம் : அக்காலத்தில் யாத்திரை செல்லும் இந்திய பக்தர்களின் அன்னபூரணியாக விளங்கியவர் ராணி அஹில்யாபாய் கோல்கர் என பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டினார்.

உ.பி., ராணி அகில்யாபாய் கோல்கர் 300வது பிறந்த நாள் விழா ராமேஸ்வரத்தில் உள்ள கோசுவாமி மடத்தில் நடந்தது.

இதில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று பேசுகையில், அக்காலத்தில் யாத்திரை செல்லும் இந்திய பக்தர்களின் அன்னபூரணியாக விளங்கியவர் ராணி அஹில்யாபாய் கோல்கர், தமிழகத்தில் வீரமங்கை வேலுநாச்சியாரை போல் வட மாநிலத்தில் முடிசூடா ராணியாக வலம் வந்தவர்.

இன்றும் அவர் அமைத்த சத்திரம் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ளது என்றார்.

முன்னதாக நயினார் நாகேந்திரன் தலைமையில் ராமேஸ்வரத்தில் மருதுபாண்டியர் சிலை சாலை முதல் கோசுவாமி மடம் வரை ராணி சிலையுடன் பா.ஜ., வினர் ஊர்வலமாக வந்தனர்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, எம்.எல்.ஏ., வானதி, மாநில பொது செயலாளர்கள் பொன்பாலகணபதி, கருப்பு முருகானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் வழக்கறிஞர் சண்முகநாதன், குமார், முன்னாள் கயிறுவாரிய தலைவர் குப்புராம், முன்னாள் மாவட்டத் தலைவர் தரணி முருகேசன், ஓ.பி.சி., அணி மாவட்டச் செயலாளர் சந்திரகுமார், ராமேஸ்வரம் நகரத் தலைவர் மாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பா.ஜ., பங்கேற்கும்:


ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அவர் கூறியதாவது:

ராமேஸ்வரம் கோயிலில் பாரம்பரியமாக உள்ளூர் பக்தர்கள் தரிசித்த சிறப்பு வழியில் செல்ல தடை விதித்தது, கண்டனத்திற்குரியது. உள்ளூர் பகதர்கள் போராட்டத்தில் பா.ஜ., பங்கேற்கும். இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவும், மீன்பிடி உரிமையை பாதுகாக்க பிரதமர் மோடி, இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறார் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us