Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆதங்கொத்தங்குடியில் உழவரை தேடி வேளாண்மை துறை முகாம்

ஆதங்கொத்தங்குடியில் உழவரை தேடி வேளாண்மை துறை முகாம்

ஆதங்கொத்தங்குடியில் உழவரை தேடி வேளாண்மை துறை முகாம்

ஆதங்கொத்தங்குடியில் உழவரை தேடி வேளாண்மை துறை முகாம்

ADDED : ஜூன் 15, 2025 11:01 PM


Google News
முதுகுளத்துார்; முதுகுளத்துார் அருகே ஆதங்கொத்தங்குடியில் உழவரை தேடி வேளாண்மை -உழவர் நலத்துறை சிறப்பு முகாம் நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் கேசவராமன் வரவேற்றார். வேளாண் துணை இயக்குனர் அமர்லால் தலைமை வகித்து கூறியதாவது:

உழவரை தேடி வேளாண்- உழவர் நலத்துறை சிறப்பு திட்டத்தில் நன்மைகள் குறித்தும், மண்வளம் பாதுகாப்பு, உயிர் உரங்களின் பயன்பாடு வேளாண் அடுக்ககம் பற்றி எடுத்துரைத்தனர்.

இத்தகைய முகாம்களில் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு கிடைக்கும். மேலும் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார். வட்டார கூட்டுறவு சார்பதிவாளர் சுகாசினி, வேளாண் அலுவலர் தமிழ் அகராதி உட்பட வருவாய்த்துறையினர், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us