Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வருவாய்த்துறை அலுவலர்களின் 2ம் நாள் காத்திருப்பு போராட்டம் அலுவலக பணிகள் பாதிப்பு

வருவாய்த்துறை அலுவலர்களின் 2ம் நாள் காத்திருப்பு போராட்டம் அலுவலக பணிகள் பாதிப்பு

வருவாய்த்துறை அலுவலர்களின் 2ம் நாள் காத்திருப்பு போராட்டம் அலுவலக பணிகள் பாதிப்பு

வருவாய்த்துறை அலுவலர்களின் 2ம் நாள் காத்திருப்பு போராட்டம் அலுவலக பணிகள் பாதிப்பு

ADDED : பிப் 24, 2024 05:55 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

சங்க மாவட்டத்தலைவர் பழனிக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ஜமால் முகமது முன்னிலை வகித்தார். வருவாய் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். என 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

சங்க பொருளாளர் செல்லப்பா, கலெக்டர் அலுவலக பணியளர்கள், தாலுகா அலுவலகத்தில் தாசில்தார், துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் பலர் பங்கேற்றனர்.

இரண்டு நாட்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடைபெறுவதால் தாலுகாக்கள், கோட்டாட்சியர், கலெக்டர் அலுவலகங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us