Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ திருவாடானை தொகுதியில் 29 புதிய ஓட்டுச்சாவடி ; தேர்தல் ஆணையம் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது

திருவாடானை தொகுதியில் 29 புதிய ஓட்டுச்சாவடி ; தேர்தல் ஆணையம் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது

திருவாடானை தொகுதியில் 29 புதிய ஓட்டுச்சாவடி ; தேர்தல் ஆணையம் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது

திருவாடானை தொகுதியில் 29 புதிய ஓட்டுச்சாவடி ; தேர்தல் ஆணையம் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது

ADDED : ஜூன் 12, 2025 11:03 PM


Google News
திருவாடானை; திருவாடானை சட்டசபை தொகுதியில் 29 ஓட்டுச்சாவடிகளை அதிகரித்து தேர்தல் ஆணையம் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

திருவாடானை சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 971 ஆண்கள், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 311 பெண்கள், 3 திருநங்கைகள் என 3 லட்சத்து 18 ஆயிரத்து 37 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இத்தொகுதியில் 347 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.

வரும் சட்டசபை தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஓட்டுச்சாவடிகளை அதிகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு ஓட்டுச்சாவடியில் 1200 வாக்காளர்கள் எண்ணிக்கை இருந்தால், அதை இரண்டாக பிரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் அலுவலர்கள் கூறுகையில், திருவாடானை சட்டசபை தொகுதியில் ஏற்கனவே 347 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. தற்போது 29 ஓட்டுச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் எண்ணிக்தக 376 ஆக உயரும்.

புதிதாக அமைக்கப்படவுள்ள 29 ஓட்டுச்சாவடிகள் ஆய்வு செய்யபட்டு தேர்தல் ஆணைய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us