Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 2 சிறுமிகளுக்கு தொல்லை; போக்சோவில் ஒருவர் கைது

2 சிறுமிகளுக்கு தொல்லை; போக்சோவில் ஒருவர் கைது

2 சிறுமிகளுக்கு தொல்லை; போக்சோவில் ஒருவர் கைது

2 சிறுமிகளுக்கு தொல்லை; போக்சோவில் ஒருவர் கைது

ADDED : மே 29, 2025 12:40 AM


Google News
திருவாடானை : சர்ச் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகளை பாலியல் தொல்லை செய்தவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏந்தக்கரையில் அந்தோணியார் சர்ச் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். கலைநிகழ்ச்சி, அன்னதானம் நடந்தது.

அதிகாலை 1:00 மணிக்கு 13 வயது சிறுமிகள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே ராதானுார் பரஞ்சோதிவாசல் கிராமத்தை சேர்ந்த அமல்ராஜ் 54, அங்கு இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

திருவாடானை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் அமல்ராஜை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us