Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பூவேந்தியநாதர் கோயிலில் தீர்த்தவாரி உற்ஸவ விழா 1008 விளக்கு பூஜை

பூவேந்தியநாதர் கோயிலில் தீர்த்தவாரி உற்ஸவ விழா 1008 விளக்கு பூஜை

பூவேந்தியநாதர் கோயிலில் தீர்த்தவாரி உற்ஸவ விழா 1008 விளக்கு பூஜை

பூவேந்தியநாதர் கோயிலில் தீர்த்தவாரி உற்ஸவ விழா 1008 விளக்கு பூஜை

ADDED : ஜன 06, 2024 05:43 AM


Google News
Latest Tamil News
சாயல்குடி: -வருண பகவானால் பூஜிக்கப்பட்ட புராண இதிகாசத்துடன் தொடர்புடைய கடற்கரை சிவாலயமாக மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவள நிறவல்லியம்மன் கோயில் திகழ்கிறது. இங்கு நேற்று முன் தினம் மாலை 5:00 மணிக்கு கோயில் வளாகத்தில் 1008 விளக்கு பூஜை வழிபாடு நடந்தது.

பூஜைகளை சேவா பாரதி தென் தமிழ்நாடு கடலாடி ஒன்றியத்தினர் செய்திருந்தனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று பூஜை செய்தனர்.

இரவு 8:00 மணிக்கு சமஸ்தானம் சார்பில் அபிஷேக ஆராதனைகள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இரவில் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று அதிகாலை 5:30 மணிக்கு சுவாமி அம்பாள் உற்ஸவ மூர்த்திகளாய் மாரியூர் கடற்கரையில் எழுந்தருளினர். கடற்கரையில் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. காலை 9:00 மணிக்கு மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டி சார்பில் அபிஷேக ஆராதனை, உச்சிக்கால பூஜை நடந்தது. மாலை 4:00 மணிக்கு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் வெளிப்பிரகார வீதி உலா நடந்தது. தொடர்ந்து இரண்டு நாட்களும் அன்னதானம் வழங்கப்பட்டது.கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தீர்த்தவாரி உற்ஸவ விழா நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us