Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ போகலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துாய்மை பணியாளர் காத்திருப்பு போராட்டம்

போகலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துாய்மை பணியாளர் காத்திருப்பு போராட்டம்

போகலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துாய்மை பணியாளர் காத்திருப்பு போராட்டம்

போகலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துாய்மை பணியாளர் காத்திருப்பு போராட்டம்

ADDED : ஜூலை 07, 2024 01:57 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்: -போகலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஓ.எச்.டி., ஆபரேட்டர்கள், துாய்மை காவலர்கள், துாய்மை பணியாளர்கள் கோரிக்கைளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

சம்பள பட்டியல் வழங்க வேண்டும். அடையாள அட்டை, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும், என வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார்.

போராட்டத்தை துவக்கி வைத்து சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத்தலைவர் குருவேல் பேசினார். கோரிக்கைகளை விளக்கி சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சந்தானம், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அய்யாத்துரை, மாவட்டத்தலைவர் பிரான்சிஸ் பேசினர். போராட்டக்காரர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒரு மாதத்திற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்து பூர்வமாக பதில் அளித்தனர். அதிகாரிகளிடம் நடந்த பேச்சு வார்த்தை குறித்து சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி பேசினார்.

போராட்டத்தில் மண்டபம் ஒன்றிய தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் கண்ணன், பொருளாளர் சோனை, போகலுார் ஒன்றிய தலைவர் சேதுராமன், செயலாளர் கலைச்செல்வன், முதுகுளத்துார் செயலாளர் இந்திரா, தேவிபட்டினம் பெருமாள் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us