Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பலத்த மழையால் மரங்கள் சாய்ந்தன

பலத்த மழையால் மரங்கள் சாய்ந்தன

பலத்த மழையால் மரங்கள் சாய்ந்தன

பலத்த மழையால் மரங்கள் சாய்ந்தன

ADDED : ஜூன் 07, 2024 11:04 PM


Google News
திருவாடானை : திருவாடானையில் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மின் தடை ஏற்பட்டது.

திருவாடானை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பாரதிநகர், சிநேகவல்லிபுரம் உள்ளிட்ட பல இடங்களில் மின் கம்பிகள் மீது மரங்கள் சாய்ந்தன. இதனால் மின் தடை ஏற்பட்டது. சில இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது. இதே போல் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு மின் சப்ளையை சரி செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us