/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பாம்பனில் துாக்கு பாலம் பொருத்தம் அக்., 1 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் பாம்பனில் துாக்கு பாலம் பொருத்தம் அக்., 1 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில்
பாம்பனில் துாக்கு பாலம் பொருத்தம் அக்., 1 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில்
பாம்பனில் துாக்கு பாலம் பொருத்தம் அக்., 1 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில்
பாம்பனில் துாக்கு பாலம் பொருத்தம் அக்., 1 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில்
ADDED : ஜூலை 28, 2024 02:55 AM

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தின் நடுவில் உள்ள துாக்கு பாலம் பலமிழந்ததால், கடந்த 2019ல், 550 கோடி ரூபாயில் புதிய பாலம் கட்டும் பணி துவங்கியது.
இந்நிலையில், 2022 நவ., 23ல் துாக்கு பாலத்தில் உள்ள இரும்பு பிளேட் சேதமடைந்ததால் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
புதிய பாலம் கட்டும் பணி முழுவீச்சில் நடந்த நிலையில், 700 டன்னில் உருவாக்கப்பட்ட ஆசியாவின் முதல் லிப்ட் வடிவ துாக்கு பாலம், ஏப்., 12ல் பாம்பன் கடற்கரையில் இருந்து பாலத்தின் நடுப்பகுதிக்கு நகர்த்திச் செல்லப்பட்டது.
நேற்று அதிகாலை, 12:20 மணிக்கு புதிய பாலத்தின் நடுப்பகுதியில் துாக்கு பாலத்தை பொறியாளர்கள் பொருத்தினர்.
அப்போது நான்கு மாத போராட்டத்திற்கு பின் துாக்கு பாலத்தை பொருத்திய மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக, வாண வேடிக்கை நிகழ்த்தி கொண்டாடினர்.
இதன்பின், தொழில்நுட்பத்துடன் துாக்கு பாலத்தை பொருத்தும் பணி, இன்னும் 15 நாட்களுக்குள் முடிவடையும்.
அக்டோபர் 1ம் தேதி முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.