ADDED : ஜூன் 11, 2024 10:54 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே லாந்தை ஆண்டியின் மகன் பாபு 48. இவர் தனது டூவீலரில் ராமநாதபுரத்திற்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்றபோது ஜெயக்குமார் 50, என்பவரை டூவீலரில் ஏற்றி சென்றார்.
அப்போது பிள்ளையார்கோவில் பகுதியில் ஜெயக்குமார் மயங்கி கீழே விழுந்தார். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போது ஜெயக்குமார் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.