ADDED : ஜூலை 10, 2024 04:59 AM

திருவாடானை, ; திருவாடானை தென்கிழக்கு தெருவில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. முன்னதாக நடந்த அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து சிவாச்சாரியார் சந்திரசேகர குருக்கள் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. அன்னதானம் நடந்தது. விழாவை முன்னிட்டு கோயில் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.