ADDED : ஜூலை 22, 2024 04:51 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிலுகவயல் தாழைமடல் காளியம்மன் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு, சுமங்கலி பூஜை நடந்தது.
முன்னதாக மூலவர் அம்மனுக்கு பால், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேக செய்து, தீபாராதனை நடந்தது. அம்மன் துதி பாடல்கள் பாடியும், கும்மியாட்டம் ஆடியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.