Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இலங்கை கெடுபிடி: கடந்த 40 நாட்களில் 7 நாட்கள் மட்டுமே மீன் பிடிப்பு * ராமேஸ்வரம் மீனவர்கள் குமுறல்

இலங்கை கெடுபிடி: கடந்த 40 நாட்களில் 7 நாட்கள் மட்டுமே மீன் பிடிப்பு * ராமேஸ்வரம் மீனவர்கள் குமுறல்

இலங்கை கெடுபிடி: கடந்த 40 நாட்களில் 7 நாட்கள் மட்டுமே மீன் பிடிப்பு * ராமேஸ்வரம் மீனவர்கள் குமுறல்

இலங்கை கெடுபிடி: கடந்த 40 நாட்களில் 7 நாட்கள் மட்டுமே மீன் பிடிப்பு * ராமேஸ்வரம் மீனவர்கள் குமுறல்

ADDED : ஜூலை 26, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையினரின் கெடுபிடியால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஜூன் 15 முதல் நேற்று வரை கடந்த 40 நாட்களில் 7 நாட்கள் மட்டுமே மீன் பிடிக்க சென்றனர். இதனால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மீனவர்கள் குமுறுகின்றனர்.

ராமேஸ்வரத்தில் 700 விசைப்படகுகளில் மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடித்து வருகின்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து இந்திய கடல் எல்லைப் பகுதியாக உள்ளதால் மீன்களைத் தேடி மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை பகுதிக்குள் செல்ல வேண்டிய நிலையுள்ளது. அங்கு இலங்கை கடற்படை தாக்குதல், சிறைபிடிப்பு சம்பவங்களால் மீனவர்கள் பீதியில் மீன்பிடிக்க செல்லாமல் முடங்குகின்றனர்.

மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஜூன் 15 முதல் நேற்று வரை கடந்த 40 நாட்களில் ராமேஸ்வரம் மீனவர்கள் 18 நாட்கள் மீன்பிடிக்க சென்றிருக்க வேண்டும். ஆனால் இலங்கை கடற்படையினரின் கெடுபிடி, கைதுக்கு பயந்து 7 நாட்கள் மட்டுமே மீன்பிடிக்க சென்றுள்ளனர். இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் சகாயம் கூறியதாவது: இலங்கை கடற்படையினர் தாக்குதலால் தொடர்ந்து மீன்பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலை நீடித்தால் ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடி தொழில் முற்றிலும் அழிந்து விடும். இதனால் மீனவர் குடும்பங்கள் வருவாய் இன்றி கடனில் சிக்கி நடுத்தெருவில் நிற்கும் அவலம் ஏற்படும். எனவே மீனவர்கள் நலன் கருதி மத்திய அரசு இலங்கையிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இல்லையெனில் மீனவர்கள் தஞ்சம் தேடி கேரளா, கர்நாடகா செல்லும் நிலை ஏற்படும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us