ADDED : ஜூன் 02, 2024 03:26 AM
திருவாடானை: திருவாடானை யூனியனில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றிய ஏழு ஆசிரியர்கள் ஒரே நாளில் ஓய்வு பெற்றனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சகாயராணி, அழகர்சாமி, ஜேம்ஸ், அருள்செல்வம், டெய்சி, ஜேம்ஸ்எட்வர்ட், அருள்சாமி ஆகிய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ்ஆரோக்கியராஜ் தலைமையில் நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் புல்லாணி, வசந்தபாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.