Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பள்ளி மாணவி பலாத்கார வழக்கு; ஆக.3 க்கு தள்ளிவைப்பு

பள்ளி மாணவி பலாத்கார வழக்கு; ஆக.3 க்கு தள்ளிவைப்பு

பள்ளி மாணவி பலாத்கார வழக்கு; ஆக.3 க்கு தள்ளிவைப்பு

பள்ளி மாணவி பலாத்கார வழக்கு; ஆக.3 க்கு தள்ளிவைப்பு

ADDED : ஜூலை 05, 2024 10:51 PM


Google News
ராமநாதபுரம் : பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி உள்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கு விசாரணையை ஆக., 3 க்கு தள்ளி வைக்கப்பட்டது.

பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பரமக்குடி 3-வது வார்டு கவுன்சிலரும், அ.தி.மு.க முன்னாள் நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது, மற்றும் புரோக்கர்களாக இருந்து செயல்பட்ட அன்னலட்சுமி உமா மற்றும் கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டு 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் அ.தி.மு.க. நிர்வாகி சிகாமணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. சிகாமணிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக்கோரி சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் கீதா உயர்நீதிமன்றம் கிளை மதுரையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதி இளங்கோவன் சிகாமணிக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சிகாமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் ஜூலை 30ந்தேதி வருகிறது.

இந் நிலையில் புரோக்கர்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா மற்றும் கயல்விழி, ராஜா முகமது, புதுமலர் பிரபாகர் ஆகியோருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியுள்ளது. நிபந்தனை ஜாமினில் ராஜமுகமது, புதுமலர் பிரபாகர் ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் தினமும் காலை ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர். அன்னலட்சுமி உமா, கயல் விழிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக்கோரி இன்ஸ்பெக்டர் கீதா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் மேற்கண்ட 5 பேர் மீதான வழக்கு விசாரணை நேற்று ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிகாமணி உள்பட 5 பேரும் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாத் வழக்கு விசாரணையை ஆக., 3க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us