/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆர்.எஸ்.மங்கலத்தில் பல மணி நேரம் மின் தடை; பொதுமக்கள், வர்த்தகர்கள் பாதிப்பு ஆர்.எஸ்.மங்கலத்தில் பல மணி நேரம் மின் தடை; பொதுமக்கள், வர்த்தகர்கள் பாதிப்பு
ஆர்.எஸ்.மங்கலத்தில் பல மணி நேரம் மின் தடை; பொதுமக்கள், வர்த்தகர்கள் பாதிப்பு
ஆர்.எஸ்.மங்கலத்தில் பல மணி நேரம் மின் தடை; பொதுமக்கள், வர்த்தகர்கள் பாதிப்பு
ஆர்.எஸ்.மங்கலத்தில் பல மணி நேரம் மின் தடை; பொதுமக்கள், வர்த்தகர்கள் பாதிப்பு
ADDED : ஜூன் 07, 2024 11:00 PM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ஏற்பட்டு வரும் பல மணி நேரம் மின் தடையால் பொதுமக்களும், வியாபாரிகளும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
மின்தடை ஏற்பட்டு பல மணி நேரம் வரை மின் சப்ளை செய்யப்படாததாலும், பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். மேலும் லேசான மழை பெய்தாலே மின்தடை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் வர்த்தகர்களும் பொதுமக்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
எனவே மின்வாரிய அதிகாரிகள் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.