Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கோட்ட அளவில் ஜூன் 26ல் தபால் குறைதீர்க்கும் முகாம்

கோட்ட அளவில் ஜூன் 26ல் தபால் குறைதீர்க்கும் முகாம்

கோட்ட அளவில் ஜூன் 26ல் தபால் குறைதீர்க்கும் முகாம்

கோட்ட அளவில் ஜூன் 26ல் தபால் குறைதீர்க்கும் முகாம்

ADDED : ஜூன் 07, 2024 04:59 AM


Google News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோட்ட அளவிலான தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் ஜூன் 26ல் நடக்கிறது.

ராமநாதபுரம் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் கூறியிருப்பதாவது:

தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜூன் 26 மதியம் 12:00 மணிக்கு நடக்கிறது. சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு புகார்களில் கணக்கு எண், பெயர், பணம் கட்டிய விபரம், கடித தொடர்புகளை புகாரில் இணைக்க வேண்டும்.

ஏற்கனவே புகார் கொடுத்தவர்கள் புதிதாக மனு அளிக்க வேண்டாம். குறைகளை மட்டும் அனுப்பலாம். ஜூன் 18க்குள் குறைகளை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகம், அரண்மனை தெற்கு தெரு, அரண்மனை வளாகம், ராமநாதபுரம் -623 501 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தனியார் கூரியரில் அனுப்பும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us