/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் நாளை மறியல் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் நாளை மறியல்
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் நாளை மறியல்
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் நாளை மறியல்
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் நாளை மறியல்
ADDED : ஜூலை 17, 2024 07:00 PM
ராமேஸ்வரம்:-இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரத்தில் நாளை (ஜூலை 19ல்) மீனவர்கள் ரோடு மறியல் செய்ய உள்ளனர்.
மீன்பிடி தடை காலத்திற்கு பின் ஜூன் 18, ஜூலை 4ல் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 17 மீனவர்கள், ஜூன் 23, ஜூலை 1ல் ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் 47 பேர், ஜூன் 26ல் நாகை மீனவர்கள் 10 பேர் என 74 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அங்குள்ள சிறையில் அடைத்தனர். 8 விசைப்படகுகள், 4 நாட்டுப்படகுகளும் இலங்கை வசம் உள்ளது.
இந்நிலையில் சிறையில் வாடும் மீனவர்களையும், படகையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாளை ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் நடக்கிறது என மீனவர்கள் சங்கத் தலைவர் சகாயம் தெரிவித்தார்.