Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நவநீத கிருஷ்ணனாக முத்துபல்லக்கில் பெருமாள்

நவநீத கிருஷ்ணனாக முத்துபல்லக்கில் பெருமாள்

நவநீத கிருஷ்ணனாக முத்துபல்லக்கில் பெருமாள்

நவநீத கிருஷ்ணனாக முத்துபல்லக்கில் பெருமாள்

ADDED : ஜூலை 21, 2024 04:41 AM


Google News
Latest Tamil News
இன்று காலை ஆடி தேரோட்டம்

பரமக்குடி: -பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் முத்து பல்லக்கில் நவநீத கிருஷ்ணனாக பெருமாள் வீதி உலா வந்தார்.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவின் 8ம் நாள் விழா நடந்தது.

காலை 9:00 மணிக்கு பெருமாள் முத்துப் பல்லக்கில் தவழும் கண்ணன் திருக்கோலத்தில் நவநீத கிருஷ்ணனாக அலங்காரம் ஆகினார்.

அப்போது மயில் இறகு கொண்டையில் சூடி, வெள்ளி குடம் ஏந்தி, ஆண்டாள் கிளி மாலையை அணிந்து உலா வந்தார்.

தொடர்ந்து காலை 11:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக மதியம் 3:00 மணிக்கு வைகை ஆற்றில் மண்டகப்படியை அடைந்தார்.

அங்கு இரவு சிறப்பு தீபாராதனைக்கு பின் 11:00 மணிக்கு மேல் குதிரை வாகனத்தில் கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்காரமாகினார்.

பின்னர் இரவு அங்கிருந்து புறப்பாடாகி அதிகாலை திருக்கோயிலை அடைந்தார்.

மேலும் இன்று காலை 10:00 மணிக்கு ஆடித் தேரில் ரத வீதிகளில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வலம் வருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us