Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அலைபேசி அழைப்பை ஏற்காத அதிகாரிகள்: மக்கள் அதிருப்தி

அலைபேசி அழைப்பை ஏற்காத அதிகாரிகள்: மக்கள் அதிருப்தி

அலைபேசி அழைப்பை ஏற்காத அதிகாரிகள்: மக்கள் அதிருப்தி

அலைபேசி அழைப்பை ஏற்காத அதிகாரிகள்: மக்கள் அதிருப்தி

ADDED : ஜூலை 05, 2024 04:25 AM


Google News
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் அரசு வழங்கிய அலைபேசி எண்களில் பொதுமக்களின் புகார் அழைப்புகளை ஏற்பதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும், அதிகாரிகள் உடனுக்குடன் பணிகள் மேற்கொள்ளவும் அரசு தரப்பில் அனைத்து துறைகளை சேர்ந்த முக்கிய அதிகாரிகளுக்கும் அலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொது மக்களின் சேவைக்காக வழங்கப்பட்ட அலைபேசியை தற்போது எத்தனை அதிகாரிகள் முறையாக பயன்படுத்துகின்றனர் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

திருவாடானை தாலுகாவில் பல்வேறு துறைகளில் உள்ள அதிகாரிகள் அரசு வழங்கிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டால் பொதுமக்களின் புகார் அழைப்புகளை எடுப்பதில்லை.

அதிகாரிகள் பதில் அளிக்காமல் அழைப்பை தவிர்த்து வருவதால் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இது குறித்து திருவாடானை, தொண்டியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தனிப்பட்ட அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டாலும், அவர்கள் எந்த அழைப்பையும் ஏற்பதில்லை. தனக்கு வேண்டியவர்களின் அலைபேசி அழைப்புகளை மட்டுமே ஏற்கின்றனர்.

அரசுத்துறையில் உயர் பொறுப்பில் உள்ளதாலேயே அவர்களிடம் மக்கள் முறையிடுகின்றனர் என்ற எண்ணம் அந்த அதிகாரிகளுக்கு ஏற்படுவதில்லை.

இதனால் புகார்களை தெரிவிக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

இது போன்று அலைபேசி அழைப்பை தவிர்க்கும் அதிகாரிகளைக் கண்டறிந்து அறிவுறுத்த கலெக்டர் விஷ்ணுசந்திரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us