/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ கோலாகலம் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ கோலாகலம்
கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ கோலாகலம்
கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ கோலாகலம்
கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ கோலாகலம்
ADDED : ஜூலை 05, 2024 04:37 AM

பெரியபட்டினம்: ஆனி மாதம் முளைப்பாரி உற்ஸவ விழா கிராமங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பெரியபட்டினம் அருகே வடக்கு புது குடியிருப்பில் உள்ள முத்து மாரியம்மன், செல்வ விநாயகர் கோயிலில் 65ம் ஆண்டு முளைக்கொட்டு உற்ஸவ விழா நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
நாள்தோறும் இரவு நேரங்களில் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று முன்தினம் நேர்த்திக்கடன் பக்தர்கள் கிராமத்தை வலம் வந்தனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
நேற்று காலை மலர் அலங்காரத்தில் மூலவர் முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சக்தி கரகம் முன்னே செல்ல ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்து காளி கோயில் ஊருணியில் கங்கை சேர்த்தனர். ஏற்பாடுகளை வடக்கு புது குடியிருப்பு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
* வண்ணாங்குண்டு ஊராட்சியில் உள்ள நாகநாத சமுத்திரத்தில் முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது.
காப்பு கட்டிய நாளிலிருந்து தொடர்ந்து கோலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்டவை நடந்தது. நேற்று முன்தினம் இரவு கரகம், அக்னி சட்டி, காவடி ஊர்வலம் நடந்தது.
நேற்று மாலை 4:00 மணிக்கு அம்மன் கரகம் முன்னே செல்ல ஏராளமான பெண்கள் பாரியை சுமந்து ஊருணியில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாமன்னர் மருதுபாண்டியர் இளைஞர் பேரவை மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.