Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

ராமநாதபுரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

ராமநாதபுரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

ராமநாதபுரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

ADDED : ஜூலை 01, 2024 10:26 PM


Google News
ராமநாதபுரம்:ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்மத்திய அரசின் சட்ட திருத்தத்தைக் கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு குற்றவியல் சட்டத்திருத்தத்தை இன்று முதல் அமல் படுத்தியுள்ளது.

ஆங்கிலேயர் கால சட்டங்களை மாற்றம் செய்து வழக்குகளை துரிதமாக நடத்துவதற்கும் தண்டனைகளை கடுமையாகவும் மாற்றியுள்ளது.

இதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷிய அதினியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும் என வழக்கறிஞர்கள் தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் ஜூலை 1 முதல் 8 வரை தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பு செய்யப்படவுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சியில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்க உள்ளனர்.

தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.-----





      Our Apps Available On




      Dinamalar

      Follow us